வசனம் :
1
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது!
வசனம் :
2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது!
வசனம் :
3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
வசனம் :
4
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது.
வசனம் :
5
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ,
வசனம் :
6
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
வசனம் :
7
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம்.
வசனம் :
8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ,
வசனம் :
9
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ,
வசனம் :
10
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
வசனம் :
11
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது).
வசனம் :
12
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்.
வசனம் :
13
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!
வசனம் :
14
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.