வசனம் :
1
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
வசனம் :
2
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
வசனம் :
3
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
வசனம் :
4
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
வசனம் :
5
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
வசனம் :
6
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
வசனம் :
7
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
வசனம் :
8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!