வசனம் :
1
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
1. (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
வசனம் :
2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
2. பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
வசனம் :
3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
வசனம் :
4
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
வசனம் :
5
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
5. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
வசனம் :
6
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
6. (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
வசனம் :
7
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
வசனம் :
8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
8. எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
வசனம் :
9
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
வசனம் :
10
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
10. அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
வசனம் :
11
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
11. அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
வசனம் :
12
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
12. நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
வசனம் :
13
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
13. நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
வசனம் :
14
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
14. (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.