வசனம் :
1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
வசனம் :
2
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
2. நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
வசனம் :
3
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
வசனம் :
4
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
வசனம் :
5
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
வசனம் :
6
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
6. மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
வசனம் :
7
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
7. அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
வசனம் :
8
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
வசனம் :
9
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
9. எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
வசனம் :
10
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
வசனம் :
11
كِرَامٗا كَٰتِبِينَ
11. அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
வசனம் :
12
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
வசனம் :
13
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
13. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
வசனம் :
14
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
வசனம் :
15
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
வசனம் :
16
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
வசனம் :
17
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
17. (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
வசனம் :
18
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
18. பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
வசனம் :
19
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
19. அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.