வசனம் :
1
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
1. (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
வசனம் :
2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
2. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
வசனம் :
3
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
3. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
வசனம் :
4
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
வசனம் :
5
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
5. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
வசனம் :
6
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
வசனம் :
7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
வசனம் :
8
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
வசனம் :
9
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
9. ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
வசனம் :
10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
10. அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
வசனம் :
11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
வசனம் :
12
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
12. அப்போது நரகம் எரிக்கப்படும்.
வசனம் :
13
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
13. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
வசனம் :
14
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
14. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
வசனம் :
15
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
15. (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
வசனம் :
16
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
வசனம் :
17
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
வசனம் :
18
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
18. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
வசனம் :
19
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
19. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
வசனம் :
20
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
வசனம் :
21
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
21. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
வசனம் :
22
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
22. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
வசனம் :
23
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
23. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
வசனம் :
24
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
வசனம் :
25
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
25. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
வசனம் :
26
فَأَيۡنَ تَذۡهَبُونَ
26. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
வசனம் :
27
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
வசனம் :
28
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
வசனம் :
29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
29. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.