வசனம் :
1
ٱلۡقَارِعَةُ
1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
வசனம் :
2
مَا ٱلۡقَارِعَةُ
2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
வசனம் :
3
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
வசனம் :
4
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
4. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
வசனம் :
5
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
5. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
வசனம் :
6
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
6. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
வசனம் :
7
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
வசனம் :
8
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
வசனம் :
9
فَأُمُّهُۥ هَاوِيَةٞ
9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
வசனம் :
10
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
வசனம் :
11
نَارٌ حَامِيَةُۢ
11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.