வசனம் :
1
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
1. மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
வசனம் :
2
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
2. (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
வசனம் :
3
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
வசனம் :
4
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
வசனம் :
5
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
வசனம் :
6
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
6. (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
வசனம் :
7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
வசனம் :
8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
8. நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
வசனம் :
9
۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
9, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?