Ayah :
1
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!
Ayah :
2
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Ayah :
3
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Ayah :
4
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
ஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.
Ayah :
5
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
ஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.
Ayah :
6
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
Ayah :
7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்.
Ayah :
8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.
Ayah :
9
۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?