வசனம் :
1
وَٱلۡفَجۡرِ
விடியற் காலையின் மீது சத்தியமாக!
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
2
وَلَيَالٍ عَشۡرٖ
பத்து இரவுகள் மீது சத்தியமாக!
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
3
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
இரட்டைப்படை மீது சத்தியமாக! ஒற்றைப்படை மீது சத்தியமாக!
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
4
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (மறுமை வந்தே தீரும்).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
5
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
6
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
7
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
(உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
8
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
அவர்கள் போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்துடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
10
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
இன்னும், பெரும் ஆணிகளுடைய ஃபிர்அவ்னுடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
11
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
அவர்கள் நகரங்களில் (பாவம் செய்வதில்) எல்லை மீறினார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
12
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
ஆக, அவர்கள் அவற்றில் விஷமத்தை (-மக்கள் மீது அநீதி செய்வதை) அதிகப்படுத்தினர்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
13
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
ஆகவே, உம் இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
14
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
15
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’’ எனக் கூறுகிறான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
16
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’’ எனக் கூறுகிறான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
17
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
அவ்வாறல்ல! மாறாக, நீங்கள் அனாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அனாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை).
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
18
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
இன்னும், ஏழையின் உணவுக்கு (நீங்கள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
19
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا
இன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் உடைய செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
20
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا
இன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
21
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا
அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
22
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا
இன்னும், உம் இறைவன் வருவான், மலக்குகளோ அணி அணியாக நிற்கும் நிலையில்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
23
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
இன்னும், அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான். (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி பலன் தரும்?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்