வசனம் :
1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
2
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
3
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
இன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
4
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
இன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது,
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
5
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
(அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும், அது முற்படுத்தியதையும், அது பிற்படுத்தியதையும் அறிந்து கொள்ளும். (-ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மையையும் தீமையையும், அவ்வாறே தனக்கு பின்னர் வருவோர் தன்னை பின்பற்றும்படி வழிகாட்டிவிட்டு வந்த நல்ல காரியத்தை; அல்லது, தீய காரியத்தை அறிந்து கொள்ளும்.)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
6
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
7
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
8
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
9
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
10
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
11
كِرَامٗا كَٰتِبِينَ
(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
12
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.)
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
13
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ
நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
14
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ
இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
15
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள்.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
16
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை.
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
17
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
18
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்
வசனம் :
19
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ
(அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்!
வேறு மொழிபெயர்ப்புகளை எடுத்துப் பார்த்தல்