வசனம் :
1
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
வசனம் :
2
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
வசனம் :
3
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
வசனம் :
4
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
வசனம் :
5
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)