Ayah :
1
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
(நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
Ayah :
2
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்.
Ayah :
3
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
படிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்.
Ayah :
4
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
Ayah :
5
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்.
Ayah :
6
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,
Ayah :
7
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
Ayah :
8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
நிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது.
Ayah :
9
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
(நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக!
Ayah :
10
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்?
Ayah :
11
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ
நீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Ayah :
12
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ
அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Ayah :
13
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
நீர் அறிவிப்பீராக! அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,
Ayah :
14
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Ayah :
15
كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).
Ayah :
16
نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ
பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
Ayah :
17
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
ஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Ayah :
18
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
Ayah :
19
كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩
அவ்வாறல்ல! அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (வணக்க வழிபாடுகள் மூலம் அவன் பக்கம்) நெருங்குவீராக!