Ayah :
1
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
Ayah :
2
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்.
Ayah :
3
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
அது, உம் முதுகை முறித்தது.
Ayah :
4
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.
Ayah :
5
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
Ayah :
6
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.
Ayah :
7
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!
Ayah :
8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!