Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة الليل - ஸூரா லைல்

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது!
Ayah : 2
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது!
Ayah : 3
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Ayah : 4
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது.
Ayah : 5
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ,
Ayah : 6
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
Ayah : 7
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம்.
Ayah : 8
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ,
Ayah : 9
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ,
Ayah : 10
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
Ayah : 11
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது).
Ayah : 12
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்.
Ayah : 13
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ
நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!
Ayah : 14
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ
ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.

Ayah : 15
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى
அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர.
Ayah : 16
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான்.
Ayah : 17
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.
Ayah : 18
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ
அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார்.
Ayah : 19
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ
யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது.
Ayah : 20
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார்.
Ayah : 21
وَلَسَوۡفَ يَرۡضَىٰ
இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார்.
Pengiriman sukses