Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة الغاشية - ஸூரா (g)காஷியா

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
(நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
Ayah : 2
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
Ayah : 3
عَامِلَةٞ نَّاصِبَةٞ
(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.)
Ayah : 4
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும்.
Ayah : 5
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும்.
Ayah : 6
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர.
Ayah : 7
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது.
Ayah : 8
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;
Ayah : 9
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
Ayah : 10
فِي جَنَّةٍ عَالِيَةٖ
(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.
Ayah : 11
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
அதில் வீண் பேச்சை அவை செவியுறாது.
Ayah : 12
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்.
Ayah : 13
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
அதில் உயரமான கட்டில்கள் இருக்கும்.
Ayah : 14
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
இன்னும், (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்.
Ayah : 15
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
இன்னும், (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்.
Ayah : 16
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
இன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
Ayah : 17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
ஆக, அவர்கள் ஒட்டகத்தின் பக்கம், அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Ayah : 18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
இன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Ayah : 19
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
இன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Ayah : 20
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
இன்னும், பூமியின் பக்கம், அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Ayah : 21
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
Ayah : 22
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை.
Ayah : 23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,
Ayah : 24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான்.
Ayah : 25
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
Ayah : 26
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)
Pengiriman sukses