Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة عبس - ஸூரா அபஸ

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
عَبَسَ وَتَوَلَّىٰٓ
(நபி முகம் சுளித்து) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,
Ayah : 2
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.
Ayah : 3
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா?
Ayah : 4
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
அல்லது (உம்மிடம்) அவர் அறிவுரை பெறுவார். ஆக, (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம் அல்லவா? (அப்படி இருக்க நீர் அவரை விட்டு எப்படி முகம் திருப்பினீர்?)
Ayah : 5
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
ஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ,
Ayah : 6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர்.
Ayah : 7
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை.
Ayah : 8
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
ஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ,
Ayah : 9
وَهُوَ يَخۡشَىٰ
அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,
Ayah : 10
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
ஆக, அவரை நீர் அலட்சியப்படுத்துகிறீர்.
Ayah : 11
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும்.
Ayah : 12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.
Ayah : 13
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
(இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில்,
Ayah : 14
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது.
Ayah : 15
بِأَيۡدِي سَفَرَةٖ
அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Ayah : 16
كِرَامِۭ بَرَرَةٖ
அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள்.
Ayah : 17
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
(ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
Ayah : 18
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
எந்தப் பொருளிலிருந்து அல்லாஹ் அவனைப் படைத்தான்?
Ayah : 19
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
விந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
Ayah : 20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான்.
Ayah : 21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான்.
Ayah : 22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
Ayah : 23
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
அவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
Ayah : 24
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்!
Ayah : 25
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
நிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம்.
Ayah : 26
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
பிறகு, பூமியைப் பிளந்தோம்.
Ayah : 27
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.
Ayah : 28
وَعِنَبٗا وَقَضۡبٗا
இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும்,
Ayah : 29
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும்,
Ayah : 30
وَحَدَآئِقَ غُلۡبٗا
அடர்ந்த தோட்டங்களையும்,
Ayah : 31
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
பழங்களையும், புற்பூண்டுகளையும்,
Ayah : 32
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)?
Ayah : 33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,
Ayah : 34
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.
Ayah : 35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும்,
Ayah : 36
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).
Ayah : 37
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும்.
Ayah : 38
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,
Ayah : 39
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.
Ayah : 40
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும்.
Ayah : 41
تَرۡهَقُهَا قَتَرَةٌ
தூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும்.
Ayah : 42
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
Pengiriman sukses