Terjemahan makna Alquran Alkarim

Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

Scan the qr code to link to this page

سورة المرسلات - ஸூரா முர்ஸலாத்

Nomor Halaman

Ayah

Tampilkan teks ayat
Tampilkan catatan kaki

Ayah : 1
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
தொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!
Ayah : 2
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
அதிவேகமாக வீசுகிற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
Ayah : 3
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
Ayah : 4
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடிய அத்தாட்சிகள் மீது சத்தியமாக!
Ayah : 5
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Ayah : 6
عُذۡرًا أَوۡ نُذۡرًا
(அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)!
Ayah : 7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
Ayah : 8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
ஆக, நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
Ayah : 9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
இன்னும், வானம் பிளக்கப்படும்போது,
Ayah : 10
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
இன்னும், மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது,
Ayah : 11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
இன்னும், தூதர்கள் (மறுமையில் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்வதற்காக) நேரம் குறிக்கப்படும்போது,
Ayah : 12
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
எந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
Ayah : 13
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் நேரம் குறிக்கப்பட்டுள்ளார்கள்).
Ayah : 14
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Ayah : 15
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 16
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
Ayah : 17
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
பிறகு, (அவர்களுக்கு பின்னர் வந்த நிராகரிப்பாளர்களான) பின்னோர்கள் (நிராகரிப்பிலும் பிறகு தண்டனை அனுபவிப்பதிலும்) அவர்(களின் முன்னோர்)களை பின்தொடரும்படி செய்தோம்.
Ayah : 18
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
Ayah : 19
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

Ayah : 20
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
Ayah : 21
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
ஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
Ayah : 22
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
Ayah : 23
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
ஆக, நாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
Ayah : 24
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 25
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
பூமியை (அது தனக்குள்) ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா,
Ayah : 26
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
(அது தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா)?
Ayah : 27
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
இன்னும், அதில் மிக உயரமான (பெரிய) மலைகளை நாம் ஆக்கினோம். இன்னும், உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
Ayah : 28
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 29
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
Ayah : 30
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
Ayah : 31
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
அது நிழல்தரக்கூடியது அல்ல. இன்னும், அது (நெருப்பின்) ஜுவாலையிலிருந்து தடுக்காது.
Ayah : 32
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
நிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
Ayah : 33
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
Ayah : 34
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 35
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
இது அவர்கள் பேசாத நாளாகும்.
Ayah : 36
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
இன்னும், அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் சாக்குபோக்குகள் கூறுவதற்கு.
Ayah : 37
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 38
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் (உங்கள்) முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
Ayah : 39
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
ஆக, உங்களிடம் (எனக்கு எதிராக தீங்கு செய்வதற்கு; அல்லது, நீங்கள் எனது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு (அந்த) சூழ்ச்சி(யை) செய்யுங்கள்.
Ayah : 40
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 41
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் (அடர்த்தியான மரங்களின்) நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
Ayah : 42
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)
Ayah : 43
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (-உங்கள் நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக (இவற்றை) உண்ணுங்கள்! பருகுங்கள்!
Ayah : 44
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Ayah : 45
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 46
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
(இவ்வுலகில்) சிறிது காலம் உண்ணுங்கள்! சுகம் அனுபவியுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள் ஆவீர்கள்!
Ayah : 47
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
Ayah : 49
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Ayah : 50
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
ஆக, (இந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) இதற்கு பின்னர் வேறு எந்த (வேத) செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
Pengiriman sukses